தினம் 85 லட்சம் செலவு

மும்பையில் கடந்த ஆண்டு இதே நாளில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் கொலை வெறி தாக்குதல் நடத்தி 200 பேரை கொன்றனர். தாக்குதலில் ஈடுபட்ட 10 தீவிரவாதிகளில் 9 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.


அஜ்மல் அமீர் கசாப் என்ற தீவிரவாதி மட்டும் உயிருடன் பிடிபட்டான். 21 வயதாகும் கசாப்பை மும்பையில் பலத்த பாதுகாப்புடன் ஜெயிலில் வைத்துள்ளனர். அவன் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவன் மீதான விசாரணையை நடத்த ஆர்தர் ரோடு ஜெயிலில் சிறப்பு கோர்ட்டு உருவாக்கப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் முதல் கசாப் மீதான வழக்கு விசாரணை தொடங்கி நடந்து வருகிறது. இன்னும் 3 மாதங்களில் கசாப் மீதான விசாரணை முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தீவிரவாதி கசாப்புக்கு ஜெயிலுக்குள் கேட்பது எல்லாம் கொடுக்கப்படுகிறது. தினமும் சிக்கன் பிரியாணி வேண்டும் என்று அடம் பிடித்து கேட்டு வாங்கி சாப்பிடுகிறான். இது போல அவனுக்காக அரசு பல விஷயங்களில் பணத்தை செலவு செய்கிறது.

இவை தவிர இவன் பாதுகாப்புக்கு என்று தனி அதிரடிப்படை ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. அதற்கும் நிறைய செலவாகிறது. இதுவரை 31 கோடி ரூபாயை கசாப்புக்காக மராட்டிய அரசு செலவிட்டுள்ளது.

தீவிரவாதி கசாப்பை நல்ல உடல் நலத்துடன் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. இதனால் இவனுக்காக தினமும் 85 லட்சம் ரூபாயை மராட்டிய அரசு தேவை இல்லாமல் செலவு செய்ய வேண்டியதுள்ளது.

கசாப்புக்கு மருத்துவ மனையில் தங்கி சிகிச்சை பெறுவதற்காக ஜெ.ஜெ. மருத்துவமனையில் தனி செல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செல்லை குண்டு துளைக்காத அறையாக மாற்றி உள்ளனர். இதற்கு மட்டும் ஒரு கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

0 comments: