உயிர் தப்பினார் சிராஞ்சீவி !

ஐதராபாத்தில் முனிசிபல் தேர்‌தலுக்கான பிரச்சாரம் களைகட்டியுள்ளது. பிரஜா ராஜ்ஜியம் கட்சி தலைவர் சிரஞ்சீவி ஐதராபாத்தில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார்.

டாப் அகற்றப்பட்ட வாகனத்தில் அவர் பேசிக்கொண்டிருக்க வாகனம் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது. முன்னாள் சென்ற தொண்டர் ஒருவர் வழியில் இருந்த மின்சார ஒயர்களை அகற்றிக் கொண்டே சென்றார்.
அப்போது எதிர்பாராத விதமாக ஒயர் அறுந்து விழுந்தது. இதனால் தீப்பொறிகள் கிளம்பின. ஆனால் சிரஞ்சீவி சுதாரித்துக் கொண்டு தப்பினார்.
இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

0 comments: