50 கோடியைத் தாண்டியது தொலைபேசி சந்தாதாரர்கள்

இந்தியாவில் தொலைபேசி சந்தாதாரர்களின் எண்ணிக்கை மொத்தம் 509 மில்லியனாக உயர்ந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தைக் காட்டிலும் இது 3.03 சதவிகித உயர்வாகும் என தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ட்ராய் தெரிவித்துள்ளது.

இந்த உயர்வின் மூலம் இந்தியாவின் டெலிடென்சிட்டி 43.5 சதவிகிதமாக உள்ளது.

கம்பியில்லாத தொலைபேசி மற்றும் மொபைல் இணைப்புகள் பெற்றுள்ளோர் எண்ணிக்கை மட்டும் 471.73 மில்லியனாக உள்ளது.

மொபைல் சேவையைப் பொறுத்தவரை முதலிடத்தில் இருப்பது தனியார் நிறுவனமான பார்தி ஏர்டெல் 110.5 மில்லியன் சந்தாரர்களுடன் முதலிடத்தில் உள்ளது.

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் 86.11 மில்லியன் சந்தாரர்களுடன் இரண்டாம் இடத்திலும், வோடபோன் 82.84 மில்லியன் சந்தாரர்களுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளது.

அனைத்து வசதிகளும் கொண்ட அரசுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் 58.75 மில்லியன் சந்தாதாரர்களுடன் நான்காம் இடத்தில் உள்ளது.

டாடா நிறுவனம் 5-ம் இடத்தில் உள்ளது. இதன் சந்தாதாரர் எண்ணிக்கை 46.79 மில்லியன்.

பிராட்பேண்ட் இணைப்பு பெற்றுள்ளோர் எண்ணிக்கை 7.22 மில்லியன். அதேநேரம் லேண்ட்லைன் இணைப்பு பெற்றவர்களில் 37.31 மில்லியன் சந்தாதாரர்கள் அவற்றை திரும்ப சரண்டர் செய்துள்ளர்.

0 comments: