திமுகவுக்கு நாடார் பாதுகாப்பு பேரவை ஆதரவு

திருச்செந்தூர் தொகுதி இடைத்தேர்தலில் திமுகவுக்கு அகில இந்திய நாடார் பாதுகாப்புப் பேரவை தனது ஆதரவை தெரிவித்துள்ளது.
இவ்வமைப்பின் தலைவர் எஸ்.ஏ. சுபாஷ் பண்ணையார், பேரவை நிர்வாகிகளுடன் சனிக்கிழமை திருச்செந்தூரில் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியை சந்தித்து இதற்கான ஆதரவு கடிதத்தை கொடுத்தனர்.

அக்கடித்தில் இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பதோடு, ஸ்ரீவைகுண்டம் அணை மணல் மேடாகி, அதன் கொள்ளளவு குறைந்து விட்டது. இதனால், வெள்ள நீர் வீணாக கடலில் கலக்கிறது. ஆதலால் ஸ்ரீவைகுண்டம் அணையை சீர்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

இச்சந்திப்பின் போது திமுக வேட்பாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், டி.எம்.பி. இயக்குநர் ராஜ்குமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

0 comments: