பிரிட்டிஷ் சிப்பாய்கள் சுட்டுக்கொலை

ஆப்கானிஸ்தான் நாட்டு காவலர் ஒருவரால் பிரிட்டனின் ஐந்து பாதுகாப்பு வீரர்கள் கொல்லப்பட்டுள்ள நிலையிலும், அங்குள்ள பாதுகாப்பு படையினருக்கு தொடர்ந்து பிரிட்டன் பயிற்சியளிக்கும் என்று பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரவுண் கூறியுள்ளார்.

தாலிபான்கள் ஆப்கானிஸ்தான் படையினரை கண்டு மிகவும் பயப்படும் நிலையில், அவர்களுக்கு பயிற்சி அளிப்பது முக்கியமானது என்று கார்டன் பிரவுண் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்ததில் தெரிவித்துள்ளார்.


பிரிட்டிஷ் துருப்பினர் ஐவரை தாங்கள்தான் கொலை செய்தோம் என்று தாலிபான்கள் கூறியுள்ள நிலையில், தாலிபான்கள் ஆப்கானிஸ்தானின் காவல்துறையில் ஊடுருவியுள்ளார்கள் அல்லது காவல்துறையில் ஒரு உறுப்பினரை அவர்கள் பயன்படுத்தியிருக்கலாம் என்றும் கார்டன் பிரவுண் அவர்கள் தெரிவித்துள்ளார்.
ஹெல்மண்ட் மாகாணத்தில் ஒரு சோதனைச் சாவடியில் இடம்பெற்ற இந்தத் தாக்குதலில், பிரிட்டனைச் சேர்ந்த பல இராணுவ வீரர்கள் மற்றும் ஆப்கான் பொலிஸ் அதிகரிகள் பலரும் காயமடைந்துள்ளனர்.

0 comments: