தாலிபான்கள் ஆப்கானிஸ்தான் படையினரை கண்டு மிகவும் பயப்படும் நிலையில், அவர்களுக்கு பயிற்சி அளிப்பது முக்கியமானது என்று கார்டன் பிரவுண் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்ததில் தெரிவித்துள்ளார்.
பிரிட்டிஷ் துருப்பினர் ஐவரை தாங்கள்தான் கொலை செய்தோம் என்று தாலிபான்கள் கூறியுள்ள நிலையில், தாலிபான்கள் ஆப்கானிஸ்தானின் காவல்துறையில் ஊடுருவியுள்ளார்கள் அல்லது காவல்துறையில் ஒரு உறுப்பினரை அவர்கள் பயன்படுத்தியிருக்கலாம் என்றும் கார்டன் பிரவுண் அவர்கள் தெரிவித்துள்ளார்.
ஹெல்மண்ட் மாகாணத்தில் ஒரு சோதனைச் சாவடியில் இடம்பெற்ற இந்தத் தாக்குதலில், பிரிட்டனைச் சேர்ந்த பல இராணுவ வீரர்கள் மற்றும் ஆப்கான் பொலிஸ் அதிகரிகள் பலரும் காயமடைந்துள்ளனர்.
0 comments:
Post a Comment