10, பிளஸ் 2வில் நூறு சதவீதம் பெற்ற பள்ளி ஆசிரியருக்கு விருது
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் நூறு சதவீதம் பெற்ற பள்ளி ஆசிரியர்களுக்கு கல்வித்துறை சார்பில் விருது வழங்கப்படுகிறது.பொள்ளாச்சி மாவட்ட கல்வி அலுவலர் ராஜகோபால் வெளியிட்டுள்ள அறிக்கை:பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் கடந்த பிளஸ் 2 பொதுத்தேர்வில் ஒரு அரசு உதவிப்பெறும் பள்ளி உட்பட 15 பள்ளிகள் சதம் அடித்தன. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், இரண்டு அரசு பள்ளிகளும், 22 தனியார் பள்ளிகளும் சதம் அடித்தன. இப்பள்ளி ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்படவுள்ளது. இதற்கான விழா, மகாலிங்கம் பொறியியல் தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் இன்று நடக்கிறது. 350 ஆசிரியர்கள் கவுரவிக்கப்படவுள்ளனர்.கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆனந்தி, எஸ்.எஸ்.ஏ., திட்ட கவுரவ ஆலோசகர் விஜயகுமார் <உட்பட பலர் பங்கேற்கவுள்ளனர். அடுத்த வாரம் ஆசிரியர்களை கவுரவிக்கும் விழா நடக்கவுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment